தீர்வைத் தேடி...

கவலைகள்

முற்றுகையிடுகையில்

கடவுளின் வழித்தடம்

கண்களுக்கு

புலப்படுகிறது


முயற்சிகள்

முறியடிக்கப்படுகையில்

பகுத்தறிவு

பாதி விலகி

பகவானிடம்

சரணடைகிறது

மனது...


தன்னம்பிக்கை

தளர்ந்து...

வருகிற தடைகளை

தகர்த்தெறிய

தேவதூதனை

தேடுகிறது

மனது...


வழிப்போக்கனின்

வார்த்தைகளிலாவது

வந்து சேருமோ

வளமான தீர்வு?


சோதிடர்கள்

மகான்கள்

மாக்கான்கள்...


எவர் சொல்லும்

ஏற்புடையதாய்...


என்னை தொலைத்து

எவரிடத்திலோ

தேடி...


அயர்ந்து உறங்குகிறதோ

ஆறாவது அறிவு...