விளங்கவில்லை...


கஷ்டப்பட்டு சேர்த்த

காசுகள்

காணிக்கையாய்

உண்டியலில்...


சில்லரைச் சத்தத்தில்

சிந்தை மகிழ்வானா

இறைவன்?


சுவாசிக்கும் காற்று

சுழல்கிற பூமி

எழுகிற பிறப்பு

விழுகிற இறப்பு

எல்லாம்

நீ...


அனைத்தும்

உன்னிடத்தில்...


காணிக்கைகள்

எவருக்கு?

கடவுளே விளங்கவில்லை.....