கிழக்கைக் கிழித்து...


எழுதுவதற்கு...
ஏங்கிக் கிடக்கும்
விரல்கள்...

முழு நேரமும்...
பணிக்குள்
மூழ்கிக்கிடக்கும்
மூளை...

ஆயிற்று...
ஆறேழு மாதங்கள்
அவசரமாய் உதிர்ந்து
போயிற்று...

இருள் படர்ந்த
இரவு விலகி
கிழக்கைக் கிழித்து
வைகறைச் சூரியன்
வருகிறது வெளியே...

இளைப்பாறிய...
நாட்கள் போய்...

இனி..
கார்த்திகை மழையாய்...
கவிதைகள்
நனைத்திடும்...