விலைவாசி

பாமரன் கேட்டான்... 
என்று... குறையும் 
எகிறிக்குதிக்கும் 
எங்கள் தேசத்து 
விலைவாசி 


அரசியல்வாதி... 
அவசரமாய்ச் சொன்னான்... 


விலைவாசியை விட
பன்மடங்கு உயர்ந்திருக்கிறது... 
பாமரன்
வாக்களிக்க.. 
வாங்கும் விலை... 


விலைவாசி ஏற்றத்தால்... 
பாதிக்கப்படுவது 
பாமரனோடு 
நாங்களும் தான்...