எங்கே போகிறது?

எங்கே போகிறது? எங்கள் பழம்பெரும் பாரத தேசத்தின் பண்பாட்டை தாங்கி நிற்கும் தாய்க்குலங்களின் மனநிலை? உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் இந்திய தேசத்தை அண்ணாந்து பார்த்து அதிசயித்துப் போவது எதைக்கண்டு? எப்படி வேண்டுமானாலும் சுற்றித்திரிந்த மனிதக்கூட்டம் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறைக்குள் வந்துவிடத்துடிக்கிறதே யாரைப் பார்த்து?
இவை அனைத்திற்கும் ஒரே விடை பாரதப் பாவைகளின் பண்பாட்டைப் பார்த்து. இந்து மதப்படி ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனையே கடவுளாக நினைக்கிறாள். கணவனும் தன் மனைவியை உயிராக நினைக்கிறான். ஏன் முழு முதற்கடவுளாகிய ஈஸ்வரனே தன் உடலில் பாதியை தன் மனைவிக்குக் கொடுத்து அர்த்தனாரீஸ்வரனாக காட்சியளிக்கிறார். இப்படி கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உயிருக்குயிராய், அணுவுக்குள் அணுவாய் கலந்து நிற்பதே உயரிய வாழ்க்கை. அப்படிப்பட்ட கணவன் கட்டிய தாலியை நெஞ்சில் சுமப்பதே பெண்ணுக்குப் பெருமை. தாலி கணவனின் நினைவுகளையும், சுய கட்டுப்பாட்டையும் சுகமாக சுமக்கிற சூத்திரக்கயிறு. இது புதிதல்ல. இதுவே நமது பண்பாடு.
இப்பொழுது ஒரு புதுக்கலாச்சாரம் புறப்பட்டு வந்திருக்கிறது.ஏதேதோ சொல்லி ஏமாந்து நிற்கும் மக்களை நல்வழிப்படுத்துவதாய் நகர்ந்து திரிகிறார்கள் காவி உடையில் சில இளைஞர்கள். புதியதாய் முளைத்திருக்கிறார்கள் இவர்கள். எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கட்டும். நாங்கள் தடுக்கவில்லை. எங்கள் மனதை உறுத்துகிற விசயம் ஒன்றுதான்.
வாலிப வயதில் காவி உடையணிந்து சொற்பொழிவாற்றும் இவர்களின் படம் பொறித்த டாலர்களை எம் குலப்பெண்களும் நெஞ்சில் சுமக்கிறார்களே ! இது எப்படி நியாயம் ? இந்துமதப் பண்பாட்டை இழிவு படுத்துகிற செயல் இது. எத்தனை கஷ்டம் வந்த போதும் கண்மூடும் காலம் வரை ஏன் ஏழ் பிறப்பிலும் உன்னைத்தவிர ஒருவரையும் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று வாழ்ந்த எமது பெண்கள் ஏன் இப்படி தரம் தாழ்ந்து போனார்கள். எங்கோ உபதேசிக்கிற உயிருள்ள ஒரு வாலிபனுடைய படம் பொறித்த டாலரை கழுத்தில் அணிவது சரியா? துறவியே ஆனாலும் தூரத்திலேயே இருக்கட்டும். இல்லத்திற்குள் மட்டுமல்ல இதயத்திற்கு அருகிலும் அழைத்துப் போவது அநாகரீகமல்லவா ? மாற்றிக் கொள்ளுங்கள் பழக்கத்தை. மஞ்சள் கயிறுக்கு அருகில் மலிவு விளம்பர குப்பைகளை கோர்த்துக் கொள்ளாதீர்கள். இல்லமே கோயில். இல்லத்தில் இருப்பவர்களே இதய தெய்வங்கள். இதையும் மீறி மனதில் அமைதி இல்லையேல் ஆண்டவன் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்லுங்கள். அனாவசியமாய் வார்த்தைகளில் வசியம் பூசி சொற்களால் மக்களைச் சொக்க வைக்கிற மனிதர்களிடத்தில் மயங்கி விடாதீர்கள். நாம் பிழையானால் நமது பண்பாடும் பிழையாகிப் போகும்.

குறுக்கெழுத்துப் போட்டி



இடமிருந்து வலம் :

1. திருக்குறளில் 133 ______ உள்ளது.

3. தேர்தலில் போட்டியிடும் அமைப்பின் பெயர்

5. அன்பளிப்பு

8. ஒரு இந்திய மாநிலம்

11. கர்மவீரர்

15. கை

16. நிழல் வேறு சொல்

19. குதிரை

20. பயம்.


வலமிருந்து இடம் :

2. அரசர்களுக்கு வீசப்பட்டது

7. சிரம்

10. வழக்குகளுக்கு முடிவு சொல்பவர்

18. குழந்தைகளுக்கு பிடித்த சிங்க ஆங்கில சினிமா

22. ரேடியத்தை கண்டுபிடித்தவர்


மேலிருந்து கீழ்

2. தமிழகத்தில் அணைக்கட்டு உள்ள ஊர்

8. வானம் - அகரம் சுருங்கியுள்ளது

9. நான்கு வேதத்தில் ஒன்று

15. இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு தொகுதி


கீழிருந்து மேல் :

3. வா - ஆங்கிலத்தில்

4. கோபம் - இடை இல்லை

6. சூரியன்

10. அகலம் எதிர்ச்சொல்

12. காந்தியடிகள் அடிக்கடி சொல்வது

13. கணவன்

14. சிவகங்கை தொகுதியில் தோற்றவர் பெயரின் முதல்இரண்டெழுத்து

17. மார்கழி ஸ்பெசல் தலைகீழாய்

20. கம்பரின் மகன்

21. வயல்களுக்கு இடப்படும் உர வகையில் ஒன்று

22. பாரின்கன்ட்ரி - தமிழில்









முயற்சி

முன்னூறு முறை விழுகிற போதும் சிறு சலிப்பு கூட
இல்லாமல் புன்னகை தவழ தத்தித் தத்தி தவழ்ந்து எழுந்து நடை பயில்கிறது குழந்தை.தடுமாறி விழுகிற போதும் எத்தனை முறை விழுந்தோம் என எண்ணிக்கை எடுக்கும் பக்குவம் அதற்கு இல்லை.அதன் ஒரே எண்ணம் நடக்க வேண்டும். எழுந்து சென்று எட்டுகிற பொருளை எடுக்க வேண்டும். தொடர்ந்து செய்கிற முயற்சிகளால் தொட்டுவிடுகிறது தன் இலக்கை. வாழ்க்கையிலும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். இது வெறும் அன்றாட நடவடிக்கை அல்ல.அற்புதமான தத்துவம் இதனுள் பொதிந்திருக்கிறது.எந்த ஒரு மனிதன் தன் தோல்விகளைக்கணக்கெடுக்காமல் தொடர்ந்து முயல்கிறாரோ அவர் நிச்சயம் நினைக்கிற காரியத்தை சாதித்துக் காட்டுவார். அப்படியே கணக்கெடுத்தாலும் பதினைந்து முறை தோல்வியுற்று விட்டோமே என எண்ணாமல் பதினைந்து தடைப் படிகளை கடந்து மேலேறி வந்து விட்டோம். வெற்றிக்கு நமக்கு மிக அருகில் தான் இருக்கிறது. சீக்கிரம் அகப்பட்டு விடும் என்கிற சிந்தனையே வலுவாக இருக்க வேண்டும்.


உலக உயிரினங்களின் ஜீவநாடி எது என்றால் தொடர்ந்து முயற்சிப்பது தான். ஒரு நாள் மட்டுமே உயிர் வாழ்கிற உயிரினத்திலிருந்து முன்னூறு ஆண்டுகள் உயிர் வாழும் ஆமைகள் வரை, வாழ்கிற ஒவ்வொரு நிமிடமும் என்ன நிகழ்ந்தாலும் அதனைத் தாங்குவதற்கும் அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்கிறது.


எறும்புகள் எப்போதாவது நின்று பார்த்திருக்கிறோமா? ஓய்வு என்பதை ஒரு போதும் ஒத்துக் கொள்வதில்லை அவைகள். ஜடப்பொருள்கள் மட்டுமே அசையாமல் அப்படியே கிடக்கிறது. உயிருள்ள ஒவ்வொன்றும் எடுத்த காரியத்தை சாதிப்பதற்கு ஓராயிரம் முறை ஆனாலும் ஓயாமல் முயற்சிக்கிறது.


ஏன் மனித இனம் மட்டும் இதற்கு விதி விலக்கா? “ சாதிப்பதற்கு முன்னால் சாகக் கூடாது என்று நினைப்பவர்கள் நாங்கள் ” இதை நட்டு வையுங்கள் விதையாக உங்கள் மனதிற்குள். நாளை இது விருட்சமாகி இந்த தேசத்தையே உங்களை நோக்கி உற்றுப் பார்க்க வைக்கும் உற்சாக மந்திரமாகும். இதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பாருங்கள் அசுர வேகம் உங்களுக்குள் உருவாகும்.


அமெரிக்காவைச் சேர்ந்தவர் எரிக்வெய்கன் மேயர் 13 வயதிலேயே கண் பார்வை பறி போய் விட்டது. ஆயினும் அயராத முயற்சியால் 1999-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிக்காட்டினார். முதன் முதலாய் பார்வையற்ற ஒருவரின் பாதச்சுவடுகளை பெருமையோடு பெற்றுக்கொண்டது எவரெஸ்ட் சிகரம். தன்னை விட இவரே உயர்ந்தவர் என்றும் ஒப்புக் கொண்டது. இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். சாதாரண மனிதனாக இல்லாமல் உதாரண மனிதனாக உருவாக வேண்டும் ஒவ்வொருவரும்.


முயற்சிகளே மனிதனின் முதுகெலும்பு. தொடர்ந்து முயற்சிப்போம். எதுவாக இருந்தாலும் அது நமக்கு எட்டித் தொடும் தூரம்தான்.

வழங்குங்கள்...


நண்பர்களே!

உங்களது

வாழ்த்துக்களும், கருத்துரைகளும்தான்

எனக்கு

வார்த்தைகளை

வரவழைக்கும்

வல்லமை மிக்க

வழிகாட்டிகள்



எழுதுகோல்கள்

ஏங்குவதும்

இதற்குத்தான்...


உற்சாக

ஊற்றுகள்

உற்பத்தியாவதும்

இதில்தான்...



பாராட்டுகள்...

பாமரனைக்கூட

பகுத்தறிவாளனாய்

பட்டை தீட்டும்...


தவறாமல்

கருத்துக்களை

வழங்குங்கள்...


தரணியில்...

தமிழோடு

நாமும் வளர்வோம்...

















அனுபவம்

வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு மனிதனும் சேர்க்கிற ஒப்பற்ற சேமிப்பு அனுபவம். மண்ணில் பிறந்த விநாடி முதல் வளர்கிற ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு அசைவும் வாழ்க்கைத் தத்துவத்தை போதிக்கிறது. சந்தோசம், துக்கம், அழுகை ஒவ்வொன்றும் ஏற்படுத்துகிற தாக்கங்களை மனிதன் தன் மூளையில் பதிவு செய்து கொள்வதால்தான் எதிர்காலம் என்கிற ஏணியில் ஏறுகிறபோது தடுமாறாமல் ஏறி உயர்ந்த நிலைக்குச் செல்கிறான். எவர் ஒருவர் தன் கடந்த கால வாழ்வின் கசந்த அனுபவங்களையும், மகிழ்ச்சியோடு இருந்த மனநிலையையும் நினைவில் கொண்டு ஒவ்வொரு அடியையும் முன்னே எடுத்து வைக்கிறாரோ அவரது வாழ்க்கைப் பாதை வெற்றியை நோக்கிச் செல்கிறது. தனக்கு மட்டும் பாடமாக எடுத்துக் கொள்ளாமல் தன் சந்ததிகளுக்கும் அதனை போதித்துச் செல்கிறாரோ அந்த
சந்ததிகளில் அதனை ஏற்றுக் கொள்பவர்கள் மகத்தான சாதனைகள் புரிகிறார்கள்.
சொல்லுகிற அனுபவ வார்த்தைகளை காதில் வாங்காமல் செவிடர்களாய் இருப்பவர்கள், தங்கள் காதுகளை மட்டும் மூடிக் கொள்வதில்லை தங்கள் வாழ்க்கையின் எதிர்கால ஏற்றமிகு கதவுகளையும் மூடிக்கொள்கிறார்கள். இந்த பூமியின் மீது நம் முன்னோர் என கோடிக் கணக்கானோர் பிறந்து தவழ்ந்து, வாழ்ந்து மடிந்து தங்களது பிறப்பின் மிச்சமாக அனுபவங்களை நிரந்தர சொத்தாக மற்றவர்களுக்கு சொல்லிச் சென்றிருக்கிறார்கள். எனவே குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்க்கையில் வலிகளும், வலிமைகளும் வரும் வழியை சொற்களால் அனுபவத்தை பகிர்ந்தளிப்போம். நிச்சயம் அவர்களுக்கு இருள் நேரத்தில் கை விளக்காய் மாறும். வாழ்க்கையை வெளிச்ச தேசத்தை நோக்கி நடைபோடச் செய்யும்.

ஒரு சாலையில் வேகமாகப் பயணிக்கிற வாகனம் அந்த சாலையில் “ சாலை பழுது பார்க்கப்படுகிறது கவனம் தேவை ” என்ற அறிவிப்பு பலகையைப் பார்த்தவுடன் ஓட்டுபவர் எச்சரிக்கையாகி வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுகிறார். அதைப் போல அனுபவப் பகிர்வும் ஒரு எச்சரிக்கை தான்.

அனுபவத்தைச் சொல்வதும் அறிவுரையைப் போலத்தான். உலகில் இந்த ஒன்றில்தான் கொடுப்பவர்கள் அதிகம். வாங்கிக் கொள்பவர்கள் மிக மிக குறைவு. எல்லோரும் ஏற்றுக் கொண்டால் இந்த உலகமே அறிவாளிகளின் உறைவிடமாக உருமாறியிருக்குமே ?

தீர்வைத் தேடி...

கவலைகள்

முற்றுகையிடுகையில்

கடவுளின் வழித்தடம்

கண்களுக்கு

புலப்படுகிறது


முயற்சிகள்

முறியடிக்கப்படுகையில்

பகுத்தறிவு

பாதி விலகி

பகவானிடம்

சரணடைகிறது

மனது...


தன்னம்பிக்கை

தளர்ந்து...

வருகிற தடைகளை

தகர்த்தெறிய

தேவதூதனை

தேடுகிறது

மனது...


வழிப்போக்கனின்

வார்த்தைகளிலாவது

வந்து சேருமோ

வளமான தீர்வு?


சோதிடர்கள்

மகான்கள்

மாக்கான்கள்...


எவர் சொல்லும்

ஏற்புடையதாய்...


என்னை தொலைத்து

எவரிடத்திலோ

தேடி...


அயர்ந்து உறங்குகிறதோ

ஆறாவது அறிவு...

தைப்பொங்கல்

தைப்பொங்கலுக்கு...

வழங்குகிற

இலவச சேலையில்

இருக்கவேண்டிய

அளவோ

ஆறு மீட்டர்



இதில்...

அரை மீட்டர்

அமைச்சருக்கும்

அரை மீட்டர்

அதிகாரிகளுக்கும்

அன்பளிப்பாய்...


இறுதியாய்...

இலவசத்தில்

நமக்கு கிடைப்பதோ

நான்கு மீட்டர் நூல் சேலை..


இது...

உடம்பை

போர்த்திக்கொள்ளவே

போதாது...

உடுத்துவது எதை?



தைப்பொங்கலுக்கு

தரையில் பொங்கல்

வைக்கச் சொன்னால்

மக்கள்

தலையிலல்லவா

பொங்கல் வைக்கிறார்கள்

அரசியல்வாதிகள்...

மலை...



அடிக்கடி...

மலையேறுவதால்


பாதையில் கிடக்கிற

தடைக் கற்களைக் கூட

படிக்கற்களாகவே

பார்க்கிற

பக்குவம்

எங்களுக்கு உண்டு...

முன்பு...

இருபது ஆண்டுகளுக்கு முன்பு...

எங்கள் ஊரில்
தாலி முதல் தங்க நகைகள் வரை
தயாரிக்கும் தங்கச் சிற்பி
தங்கைய ஆசாரி

திருமண நாளை
உறுதிப்படுத்தும் உரிமை
புரோகிதர்களுக்கும்
புரட்டிப் பார்க்கும்
பஞ்சாங்கங்களுக்கும்
இம்மியளவும் இருந்ததில்லை

தங்கைய ஆசாரி
தாலி தரும்
திருநாளே திருமண நாள்

அவர்
குனிந்து பர்க்கும் நாள்
கும்பாபிசேகம் ...
நிமிர்ந்து பார்க்கும் நாள்
நிச்சயதார்த்த விழா ...

காதிலிருந்து
காலில் அணியும்
கொலுசு வரை அவரது
கொல்லுப் பட்டறையில்
கொலு வீற்றிருந்தது
தங்கமாய் ....

தங்கம்
அவரிடம்
அனுமதி வாங்கியே
எங்களூருக்குள்
எட்டிப் பார்க்கும் ...

இன்று ...
தடுக்கி விழுந்தால்
தங்க மாளிகைகள் ...

தங்கைய ஆசாரி
எடுபிடியாய்
ஏதோ ஒரு நகைக் கடையில் ...

தங்கம் கூடத்
தகரமாகுமோ ?

பூவுலக சொர்க்கம்


எங்கள் இல்லத்து சுவர்களிலும்
இருக்கின்ற பொருட்களிலும்
அனைத்திலும் அப்பிக் கிடக்கிறது
அன்பு மகளின்
அன்றாட சேட்டைகள்

மொழு மொழு
குழ்ந்தையாய்
தவழ்ந்த போது
தாங்கி மகிழ்ந்த
மொசைக் தரைகள்

பிஞ்சுப் பாதங்களை
பிரியமாய் தாங்கிய
படிக்கட்டுகள்

இப்படி
அஃறினைப் பொருட்களும்
ஆசையோடு வளர்த்தது
உன்னை...

மூன்று வயதில்...
காதுகுத்திய வலியில்
கத்தி அழுத போது
உன் கண்களை விட
எங்கள் கண்களே
அதிகம் அழுதது

படிப் படியாய்
வளர வளர
படிப்பிலும் பக்குவத்திலும்
முதலிடத்தை
முடிந்து வைத்துக்கொண்டவள்
நீ...

ஒவ்வொரு முறை
பார்க்கும்போதும்
நெஞ்சில் பரவும்
பரவசங்கள்...

இந்திர லோகத்தில்
இருந்தாலும்
இப்படியொரு சந்தோசம்
இனியும் வாய்க்காது
எங்களுக்கு...

காலச் சக்கரம்...
கடந்த கால நிகழ்வுகளை
கச்சிதமாய் சேகரித்து
மறக்காமல்
மறுஒலிபரப்பு செய்கிறது

உதாரணம்...
உருவத்திலிருந்து
உச்சரிப்பு வரை
மறுவார்ப்பாய்
மாறியிருக்கும்
மகளே சாட்சி

ஆகாய விமானத்தை விட
அதிவேகமாய்
கடந்து போனது
காலங்கள்...

நிமிர்ந்து பார்ப்பதற்குள்
இருபது வருடங்கள்
இருபது நிமிடங்களாய்...

உன்
இதயத்தின் இசைவோடு
ஒரு
மங்கள நாள்
மணநாளாக
உறவினர் சூழ
உறுதிப்படுத்தப்பட்டது


தினமும்
உன்
கை படாவிட்டால்
நம் வீட்டுக்கதவுகள் கூட
கலங்கிப்போகும்

எங்கள்
செவிச்சுவர்களில்
எப்பொழுதும்
எதிரொலிக்கிறது
என் கண்ணே
உன் குரல்

இனி..
உன் முகம் பாராமல்
காலை மாலை
இரவு வேளை என்று
காலங்கள்
இனி கடந்து போகுமோ?

எங்களை
கடத்திப்போகுமோ?

ஒப்பில்லா சந்தோசம்
ஒருபுறம்...

வெந்தணலில் வேகின்ற
பூக்களின்
புல்லிவட்டங்களைப் போல்
பிரிவுத்துயரம்
மறுபுறம்

மகளின்
மணக்கோலம் கண்டு
விழிகளிலிருந்து
விழுகிறது
ஆனந்தக் கண்ணீர்

ஆயினும்..
ஆயினும்..

அது
கண்ணீர்...