வருமா?


இரு இலைகளே

ராஜ இலைகள்...

ராஜாக்களும்

இவர்களே...


இலைக்கூட்டத்தின்

மனதில்

இமைப்பொழுதும்

பயம்


வீசும் காற்றில்

அசைவதற்கும் கூட

அனுமதி கேட்டு

அஞ்சி நிற்கிறது

இலைகள்...



ராஜ இலை...

கீழிருக்கும் இலையை

உச்சாணிக்கு உயர்த்தும்

உடனே

உதிர்த்துவிடும்


இங்கு...

எதுவும்

நிரந்தரமில்லை


நடுக்கத்திலேயே

இலைகள்

நலிவடைந்து போகிறது


நமது

நாட்டுப்பண்ணில்

ஒரு வரி மட்டுமே

இவர்களது

தேசியகீதம்...

ஜெய ஜெய ஜெய ஹே!


அகிலத்திற்கு

அறிமுகப்படுத்திய

ஆணிவேரோ

மண்ணிற்குள்...


அந்த

மூன்றெழுத்து

மூச்சுச் சொல்லை

முடக்கி விட்டது


அந்த

பிரம்மாஸ்திரத்தை

பிரயோகிக்க

பிரியப்படவில்லை

ராஜ இலை...


விளைவு...


தமிழகத்தில்

இலைக் கூட்டத்திற்கு

இப்பொழுது

இலையுதிர்காலம்...


இலைகள்

மீண்டும் துளிர்க்குமா?


வருமோ
வசந்தகாலம்?
வாக்காளனின்
விரல் நுனிகளுக்குள்
விடைகள் கிடக்கிறது