கிளிப்பிள்ளை...

மாணவன்...

மதிப்பெண்களுக்காக

பாடப் புத்தகத்தின்

வரிகளை

செயற்கையாய் மூளைக்குள்

சேமிக்கும் இயந்திரம்



எல்லாக் கோட்பாடுகளையும்

படித்தோம்...

பரீட்சை எழுதினோம்...


எழுதுகிறோம்...

எழுதியவன்

எழுதியதையே....


ஒரு கோட்பாட்டையாவது

ஒப்புக்காகவாவது

சோதித்தோமா ?


சிந்தனைகளுக்கு

சிறையிட்டு...


சமன்பாடுகளை

சரிபார்த்து

ஆராயாமல்

அப்படியே

ஒப்புவித்து...


மதிப்பெண்கள்...

மதியைத் தின்று

மாணவ சமூகத்தை

மந்திகளாக்குகிறது...