குறுங்கணக்கு

நிமிர்ந்து  பார்க்கவும்

நிற்கவும்

நித்திரைக்கும் கூட

நிமிடங்களில்

பற்றாக்குறை...


இன்று...

சந்தோசம், குதூகலம்

சம்பாத்தியற்குள்

குவிந்து கிடப்பதாய்

குறுங்கணக்கு


அன்பின் பரிமாறல்கள்

ஆழப்புதைக்கப்பட்டு

அதன்மேல்

அடுக்கப்படுகிறது

கரன்சிக் கட்டுகள்...



இந்த ...

தேடலின் மு்டிவுகளில்...


அன்யோன்யங்கள்

விடைபெற்று

விவாகரத்துக்களை நோக்கியே

விரைவாய்ப்  பயணிக்கிறது



இன்று...

திருமணங்களை விட

மறுமணங்களே

அதிகமாய்

அகப்படுகிறது

கண்களுக்கு...


எல்லாம்

அவசரத்தில்...


சுகப்பிரசவத்தைச்

சுருக்கி

ஆயுதங்களின்

அறுவைச் சிகிச்சையில்

அவசரப் பயணம்

உலகிற்கு...


பிறந்ததே

அவசரத்தில்

பிறகென்ன...


விழிகள் சுருங்கி

விரிவதில் கூட

வீணாகிப்போகிறது

வினாடிகள்...


இப்படி...

இயங்கும்

மனித  இயந்தி்ரங்களின்

அதிவேகத்தை

அவசரமாய்

தாக்குகிறது

அதிநவீன நோய்கள்


அதுவும்

அவசரத்தில்...


ஆம்...

எல்லாம்

அவசரத்தில்...


பூமிப் பந்திற்குள்

புதைவற்கும்...

கேட்ட செய்தி : ஒரே ஒரு முறை




கங்கையில்  ஆயிரம்  முறை  ஸ்நானம்  செய்தலும்  

ஆலயத்தை  ஆயிரம்  முறை  வலம்  வருதலும்

தாயை  ஒரே  ஒரு  முறை  வணங்குவதற்கு  நிகராகாது

இந்தி்ய வாக்காளன்

வாக்குச் சாவடியில்

விரல் நுனியில்

வாங்கிய  மையை

தலையில் தடவினான்...


வருங்கால ஆட்சியாளர்கள்...

தலையில்

எதைத்தடவினாலும்  

ஏற்றுக்கொள்ள

ஏதுவாக...

வணங்கா மண்ணே...

எங்கள்
பாட்டிகளும் பாட்டன்களும்
அம்மாக்களும் அப்பாக்களும்
வாழ்ந்த போதும்
வீழ்ந்த போதும்
மூச்சடக்கி முடிந்த போதும்
வாரி அணைத்த மண்.

எங்கள்
தலை வணங்கா
தமிழீழ மண்ணே...
உன்னையும்
தூளாக்கி
தூக்கி வைத்திருக்கிறோம்
சலனமில்லா
சயனைடு குப்பிக்குள்...

உயிர்விடும் போதும்
உன்னை விடவில்லை
உன்னைத் தின்றே
உயிரை உடைக்கிறோம்

உள்ளிருக்கும்
மண்ணிலிருந்து
முளைத்து வருவோம்
முன்னூறு முறை...

ஆம்...
உள்ளிருக்கும்
மண்ணிலிருந்து
முளைத்து வருவோம்
முன்னூறு முறை...


தற்காலிகமாய்...
ராஜ  விசுவாச
எச்சத்தில் முளைத்திருக்கும்
எடுபிடி காளான்களை
எரித்து...

எம் மண்ணே
பொறுத்திரு...

சரித்திரம் மாறும்
உன் தலையில்
மணிமுடி ஏறும்...

வாயில்


தாயின்

கருவறை  வாயிற் கதவு

திறந்தது...

மனிதப்   பயணம்

மண்மீது

வந்தது...



எந்த

வாயிற் கதவு

திறந்தால்

எங்கள்

வறுமை  தொலைந்து

வந்து  சேரும்

வளமான   வாழ்வு ?

வைகறை


    • அனுதினமும்
            அடர்த்தியான

             இருட்டைக்  கிழித்து

             வெளிச்சதேசம்

             வெளியாவதற்கு  முன்...


             பூசிய  இருட்டு
     
             புலம்  பெயர்ந்து

             ஆதவன்

              துயில்  எழும்

              அதிகாலை

              வைகறை...