வினா?


தமிழகத்தில்...

அந்த

முதுபெரும்

சூரியனிடமிருந்து

வெப்பத்தை

வாங்கிச் சுவாசிக்கிறது

சூரியக் குடும்பம்


தங்களிடமிருந்தும்

வெளிச்சக்கீற்றுகள்

வெளிப்படுவதாய்

வெளியிடுகிறது

செய்திகளை

ஒவ்வொரு கோளும்...


சூரியனை

பணிகளை

நிறுத்திக் கொண்டு

படுக்கச் சொல்கிறது

சுற்றம்...


ஆதவனை விட

அதிவேகம்

எங்களுக்குள் இருக்கிறது


சூரியனே

சும்மா இரு

இரு கோள்கள்

நாங்கள்

இருளிலும் ஒளிவீசுவோம்

என்கிறது...


இதுபோக...

சூரியக் குடும்பத்தைச்

சுற்றி

எண்ணற்ற சுயநல

நட்சத்திரங்களும்

நகர்ந்து திரிகிறது.


சூரியனுக்குப் பிறகு

சுடர் விடுமோ

சுற்றி நிற்கும்

கோள்கள் ?


எழுகிறது

எதிர்கால வினா


விடை

காலத்தின் கைகளில்...


இல்லை... இல்லை...


வாக்களிக்கும்

விரல்களுக்குள்...