வாயில்


தாயின்

கருவறை  வாயிற் கதவு

திறந்தது...

மனிதப்   பயணம்

மண்மீது

வந்தது...



எந்த

வாயிற் கதவு

திறந்தால்

எங்கள்

வறுமை  தொலைந்து

வந்து  சேரும்

வளமான   வாழ்வு ?

வைகறை


    • அனுதினமும்
            அடர்த்தியான

             இருட்டைக்  கிழித்து

             வெளிச்சதேசம்

             வெளியாவதற்கு  முன்...


             பூசிய  இருட்டு
     
             புலம்  பெயர்ந்து

             ஆதவன்

              துயில்  எழும்

              அதிகாலை

              வைகறை...